
🔊To listen to this news in Tamil, Please select the text.
ரஹ்மா திட்டமானது துன் மகாதீரின் கருத்தில் உதித்த ஒன்று என்றும் அதனை அன்வார் இப்ராஹிம் சொந்தம் கொண்டாடக் கூடாதென்றும் கெராக்கான் தானா ஆயர் (ஜிடிஏ)இன் தகவல் பிரிவுத் தலைவர் மாட்ஸிர் இப்ராஹிம் தெரிவித்தார்.
பக்காத்தான் ஆட்சியில் மகாதீர் பிரதமராக இருந்தபோது, 2020 பிப்ரவரி 16இல் கோத்தா கினபாலுவில் உரையாற்றும்போது இத்திட்டத்தை முன்மொழிந்ததாகவும் அவரின் கருத்தின்படி அக்கொள்கையானது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு பல்லின சமூக மக்களின் இன, சமுய முன்னேற்றத்திற்கு வித்திடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக மாட்ஸிர் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
ஆக, இக்கொள்கையானது மகாதீருக்கே சொந்தமானது என்றும் அதற்கு அன்வார் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
