
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 17 தொகுதிகளைக் கோருவதாகக் கூறப்படுவதில், உண்மையில்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Jamal Yunos (ஜமால் யூனோஸ்) தெரிவித்தார்.
அதிக தொகுதிகளில் போட்டியிடுவது முக்கியமில்லை, எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பதே முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்குக் குறைதது 10 தொகுதிகளையாவது கோருவதே நியாயமாகும் என்றார்.
வெல்வதற்குக் கடினமாக இருக்கும் தொகுதிகளை மாற்றிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சியைப் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைப்பற்றுவதே தலையாய நோக்கமென ஜமால் யூனோஸ் தெரிவித்தார்.
