
🔊To listen to this news in Tamil, Please select the text.
Tasik Metropolitan Kepong ஏரியில் மூழ்கிய இருவர் தந்தையும் மகளும் என போலீசார் உறுதிப்படுத்தினர். 30 வயதுடைய தமது மகளை காப்பாற்றச் சென்றபோது அவரது 72 வயதுடைய தந்தையும் மூழ்கியதாக செந்தூல் போலீஸ் தலைவர் துணை கமிஷனர்
Ahmad Sukarno Mohd Zahari வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. மனோநிலை பாதிக்கப்பட்ட பெண் அந்த ஏரியில் விழுந்தாரா அல்லது அவர் நீந்துவதற்கு முயன்றாரா என்பது இன்னும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ஏ.சி.பி Ahmad Sukarno தெரிவித்தார்.
