
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிங்கப்பூர் நகைச்சுவை நடிகை Jocelyn Chia அண்மையில் நியூ யார்க்கில் எல்லை மீறிய பேசிய பேச்சுக்காக மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் Venu Gopala Menon மலேசியாவிடம் தமது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துககொண்டார். Jocelyn Chia மற்றவர்களை புன்படுத்திய வார்த்ததைகள் மற்றும் அவரது நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. அதோடு Jocelyn Chia சிங்கப்பூர் பிரஜையாக இப்போது இல்லை. எனவே அவரது கருத்து எந்த வேளையிலும் எங்களது கருத்தாக பிரதிபலிக்கவில்லை. எனினும் அவரது சொற்களும் செயலும் மலேசியர்களை காயப்படுத்தியிருக்குமானால் அதற்காக மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்வதாக Venu Gopalan Menon வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். எங்களது நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில் சிங்கப்பூரும் மலேசியாவும் வலுவான மற்றும பல தரப்பட்ட சிறந்த ,ஆழமான நட்புறவை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
