28.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

எஸ்பிஎம் தேர்வில் 10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றுள்ளனர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

எஸ்பிஎம் தேர்வில் கிட்டத்தட்ட 10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

கடந்தாண்டு 373,974 பேர் எஸ்பிஎம் தேர்வை எழுதினர்.

இதில் 2.7 சதவீதம் அதாவது 10,109 பேர் அனைத்து பாடங்களிலும் ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதே வேளையில் பல மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சிறப்பான தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர் என்று கல்வி தலைமை இயக்குநர் டத்தோ பக்ருதீன் கஸாலி கூறினார்.

கடந்தாண்டு 3,355 மையங்களில் 403,637 பேர் எஸ்பிஎம் தேர்வை எழுதினர். இதில் 373,974 மாணவர்கள் புதியதாக தேர்வு எழுதியவர்கள் என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles