
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உளள தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறவில்லை என
மஇகாவின் கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்திருக்கிறார். நாட்டில் இருக்கின்ற தமிழ்ப்பள்ளிகளில் 15க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடப்படும் என்று பிரதமர் கூறியதாக கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை என அவர் விவரித்தார். கடந்த சனிக்கிழமை ஜூன் 10 ஆம்தேதி ஷா அலாம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கல்வி மேம்பாடு மற்றும் இந்தியர்களின் எதிர்காலம் மீதான மாநாட்டின்போது குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப் பள்ளிகள் மூடப்படும் என்று பிரதமர் கூறவில்லை
