
🔊To listen to this news in Tamil, Please select the text.
இனம்-மொழி கடந்து அனைத்துத் தரப்பிலும் ‘பி-40’ என்னும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போதுமான உணவு கிட்டாமல் அல்லல்படுவது அம்பலமாகி உள்ளது.
குறைந்த வருமானம் பெற்ற இந்தத் தரப்பினரின் நிலை, கொரோனா பரவலுக்குப்பின் இன்னும் மோசமடைந்துள்ளது. சில குடும்பங்களின் தலைவிகள், வாரத்திற்கு அரை கிலோ என்ற அளவில் கானாங்கெளுத்தி மீனை வாங்கி காலங்கடத்துகின்றனர். இன்னும் சிலருக்கு, மதிய உணவு வெறும் சோறு-ரசத்துடன் முடிந்து போகிறது.
சமூக நலத்துறையில் இருந்து, இத்தகைய குடும்பங்கள் உதவித் தொகையைப் பெற்றாலும், அது சொற்பத் தொகை என்பதால் போதவில்லை.
இத்தகையக் குடும்பங்களுக்கு நல்ல விடியல் தோன்றும் நாள் எந்த நாள்!
