
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களின் சீருடை ஷரியா கலாசாரத்திற்கு ஏற்புடையதாக இல்லையென்றும் இரு எம்பிக்கள் மக்களவையில் பிரச்சினையை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
அது சம்பந்தமாகப் பொதுச் சேவை ஊழியர் சங்க சம்மேளனமான (Cuepacs) கியூபெக்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர்களின் சீருடையைப் பற்றி எம்பிக்கள் விமர்சிப்பதை விடுத்து அவர்களின் சேவைக்கு ஏற்ற வகையில் அவர்களது நலனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
கியூபெக்ஸின் தலைவர் அட்னான் மாட் கூறும்போது, செவிலியரின் சீருடையானது அவர்களின் சேவைக்கு ஏற்ற வகையில் இருப்பதால் அதனை ஒரு பொருட்டாக விமர்சிக்க வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
சீருடையானது அவர்களின் சேவைக்கு செளகரியமாகவும் நாகரிகமாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
