
🔊To listen to this news in Tamil, Please select the text.
20 ஆண்டுகளுக்கு முன்னர், துன் மகாதீர் குடும்பத்திற்குச் சொந்தமான Opcom (ஓப்கோம்) நிறுவனத்திற்கு 214.2 மில்லியன் ரிங்கிட் பெறுமான டெலிகோம் மலேசியாவின் ஒளியிழை ஓப்டிக் பைபர் (Optic Fibre) குத்தகைத் திட்டம் வழங்கப்பட்டதில் லஞ்சத்திற்கான கூறுகள் இருப்பின், அது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஊழல் தடுப்பு ஆணையர் டான்ஸ்ரீ Azam Baki (அஸாம் பாக்கி) தெரிவித்தார்.
அது சம்பந்தமான புகார் எதுவும் பெறப்பட்டால், நிச்சயமாக விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் அன்வார் மீது மகாதீர் தொடுத்துள்ள நிந்தனை வழக்கிற்கு எதிரான வாத அறிக்கையில், இந்த விவகாரம் குறித்து அன்வார் தெரிவித்தது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதில் கூறப்பட்ட நிறுவனமானது மகாதீரின் மூன்று புதல்வர்களுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
