
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்கு சட்டமன்றத்திற்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், 20 தொகுதிகளை கைப்பற்ற முடியும் என பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர் டான்ஸ்ரீ முஹைடின் கூறுவது, பகல் கனவாக முடியும் என பி.கே.ஆர் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார்.
இதுவொரு பிரச்சாரன வியூகம் என முஹிடினுக்கே தெரியும் என பினாங்கு சட்டமன்ற உறுப்பினருமான Saifuddin கூறியுள்ளார். எனினும் முஹிடின் போன்றவர்கள் பகல் கனவு காண்பது தவறு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
