
🔊To listen to this news in Tamil, Please select the text.
சூதாட்ட நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த லஞ்சப் பணத்தைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெர்சத்து தலைமைச் செயலாளரும் முன்னாள் உள்துறை அமைச்சராகவும் இருந்த ஹம்ஸா ஸைனுடின் எச்சரித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு தாம் ஒரு வர்த்தகராகவும் அதன் பின்னர் ஒரு எம்பியாகவும் இருந்தபோது, ஒவ்வோர் ஆண்டும் முறையாக வருமான வரியாகச் செலுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.
தாம் வரியை செலுத்ததால்தான் தமது வீட்டில் எம்ஏசிசின் சோதனை நடத்தப்- பட்டதாகச் சொல்வது அபாண்டம் என்றும் அவர் சாடினார்.



