
கிள்ளான் தாமான் உத்தாமாவில் சிலாங்கூர் சிறுவர்கள் சமூக நல இல்லம் கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இல்லத்தில் இப்போது 45 சிறுவர்கள் தங்கியுள்ளனர்.
நோய்த்தொற்று தாக்கத்தினால் இந்த இல்லம் பொருளாதார நெருக்கடி எதிர்நோக்கி இருப்பதாக அதன் பராமரிப்பாளர் உஷா அம்மா தெரிவித்தார்.
நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் இந்த 45 பிள்ளைகளின் பசியை போக்க உதவி புரியும் படி அன்போடு கேட்டுக் கொண்டார்.
பிள்ளைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள்,கோழி மீன் வகைகள் உட்பட துணிமணிகளும் தேவைப்படுவதாக அவர் சொன்னார் தொடர்புக்கு உஷா அம்மா 014 323 77 45.
