
சீனாவைச் சேர்ந்த ராணுவ விமானங்கள் மலேசிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததை அமெரிக்க ஆகாய ராணுவப் படை சாடியுள்ளது.
சீனாவின் இந்த அத்துமீறல் தென்சீனக் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்க செய்யும் என்று அமெரிக்க ஆகாய ராணுவப் படையின் பசிபிக் வட்டார கமாண்டர் ஜெனரல் கென்னத் எச்சரித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சீனாவைச் சேர்ந்த 17 ராணுவ விமானங்கள் மலேசிய வான்வெளியில் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பில் மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
பயிற்சிக்காக சீன ராணுவ விமானங்கள் ஈடுபட்டதாக அது விளக்கம் அளித்தது.
