
செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் பள்ளிவாசல்களுக்கு டாக்டர் ஜார்ஜ் குணராஜ் உதவி நல்கியுள்ளார் .
சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜார்ஜ் குணராஜ் தனது தொகுதி சார்பில் பள்ளிவாசல்களுக்கு உதவிகளை வழங்கினார் .
அடுத்த வாரம் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளை முன்னிட்டு தனது தொகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அவர் உதவி புரிந்துள்ளார் .
ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் ஏழை எளிய மக்களுக்கு டாக்டர் குணராஜ் உதவி புரிந்து வருகிறார். அந்த வகையில் இவ்வாண்டும் தனது தொகுதியில் உள்ள ஏழை மக்களை நாடிச் சென்று அவர் உதவி புரிந்துள்ளார். மேலும் பள்ளிவாசலுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



