
கோவிட் -19 தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு
அவசியம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கெடா ஜெராய் தொகுதி
பிகேஆர் தலைவர் வீ.ஆறுமுகம் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார்.
தற்போது நாட்டில் தொற்றின் தாக்கமும்,இறப்பு சம்பவங்களும் அதிகரித்து
கொண்டிருப்பதால் இந்திய மக்கள் இனியும் தயக்கம் காட்டாமலும்
காலத்தை கடத்தாமலும் தடுப்பூசி திட்டத்தில் உடனடியாக பதிந்துக் கொள்ள
வேண்டுமென புக்கிட் செலாம்பாவ் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற
உறுப்பினருமான அவர் நினைவுறுத்தினார்.
