நோய்த்தொற்று தாக்கத்தினால் சிக்கிக்கொண்ட 100க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் இன்று சிறப்பு ஏர் மலிண்டோ விமானத்தில் தாயகம் திரும்பினர்.
மலேசிய நேரப்படி இரண்டு மணிக்கு இந்த விமானம் திருச்சி நோக்கி புறப்பட்டது என்று கிள்ளான் கேபிஎஸ் பயண நிறுவனத்தின் உரிமையாளர் கே. பி. சாமி தெரிவித்தார். திருச்சி சென்றதும் அந்த விமானம் மாலை 5 மணிக்கு மலேசிய பயணிகளை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூர் திரும்புகிறது.
கோலாலம்பூர் வந்தடையும் மலேசியர்கள் 21 நாட்கள் கட்டாயமாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள தங்கும் விடுதி அல்லது வேறு விடுதிகளை தேர்வு செய்யும் உரிமை அவர்களுங வழங்கப்பட்டிருப்பதாக கேபி சாமி தெரிவித்தார்.

