

உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த இந்திய ஆடவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.இன்று காலை 11 .45 மணியளவில் தென் செபராங் பிறை சிம்பாங் அம்பாட் தாமான் இடாமான் அடுக்குமாடி குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் இடத்தில 45 வயது சிவலிங்கம் த/பெ தியாகராஜன் என்பவரின் சடலத்தை மீட்டதாக தென் செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ சோங் செர்ன் தெரிவித்தார்.காலை சுமார் 8 .00 மணியளவில் ஆடவர்கள் சிலர் அந்த இடத்தில் வாய் சண்டையில் ஈடுபட்டிருந்தை குடியிருப்பாளர்கள் சிலர் பார்த்ததாக அவர் சொன்னார்.
சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..சவப்பரிசோதனைக்காக சடலம் போலீசாரால் செபராங் ஜெயா மருத்துவமனைக்குக் கொடுத் செல்லப்பட்டது.
