
🔊To listen to this news in Tamil, Please select the text.
இன்று நோன்பு பெருநாளை கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லிம் பெருமக்கள் மற்றும் அன்பர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக பத்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் நாம் அனைவரும் சகோதரத்துவத்தை தொடர்ந்து பேணி காப்போம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து சிறப்பாக நாட்டை வழி நடத்தி வருகிறது.
அந்த வகையில் மலேசியர்கள் அனைவரும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் தமது வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்
