
நாட்டின் தடுப்புக்காவலில் நிகழும் மரணங்களுக்கு போலீஸ் படைத் தலைவரே பொறுப்பாளி என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ரஹிம் கூறினார். போலீஸ்காரர்கள் மக்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது. ஆனால் இன்று காவல் கைதிகள் மரணமடையும் சம்பவங்களை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். தடுப்பு காவல் மரணங்கள் தொடர்பில் காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்க வேண்டாம். விசாரணைக் குழுவை அமைத்து முழுமையான விசாரணை நடத்தும்படி அவர் போலீஸ் படையை கேட்டுக் கொண்டார்.
