
மலேசியா கால்பந்து குழுவை பிரதிநிதித்து விளையாடும் வெளிநாட்டு ஆட்டக்காரர்களின் தரம் குறைந்து காணப்படுகிறது என்று நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் டத்தோ எம். கருத்து தெரிவித்தார். இவர்களின் வருகையால் உள்நாட்டு விளையாட்டுகளின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார் அவர். ஆசிய மண்டல உலகக் கிண்ண கால்பந்து தேர்வு ஆட்டத்தில் தேசிய காற்பந்து குழு 0-4 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசிடம் படுதோல்வி கண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய குழுவுக்கு விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் தரம் குறித்து இப்போது கேள்வி எழுப்பப்படுகிறது.
