
🔊To listen to this news in Tamil, Please select the text.
Bandaraya Fish எனப்படும் Suckermouth catfish மீன்களை பிடிக்கும் ஆர்வலர்கள் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு ரிங்கிட் வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் முன்வந்துள்ளது. செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அக்டோபர் முதல் தேதிவரை , சிலாங்கூர் நீர்நிலைகளில் பிடிக்கப்படும் இந்த மீன்களை வெகுமதிக்கு ஈடாக குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வரலாம் என்று சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ( Amiruddin Shari ) கூறினார். இந்த ஆக்கிரமிப்பு இனவகை மீன்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆறுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஏரிகள் மற்றும் சுரங்க குளங்களில் படையெடுத்துள்ளன.
