
பேரா மாநிலத்தில் இந்தியர்கள் அதிகம் வாழும் சுங்கை சிப்புட் நகரில் இன்னமும் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பாக மெதடிஸ் கிளப் விளங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வட்டாரத்தில் பல போட்டிகளில் பங்கேற்று வாகை சூடிய பெருமை இந்த கிளப்புக்கு இருக்கிறது.
தற்போது வெட்ரன் கிண்ண கால்பந்து to போட்டிகளில் இந்த கிளப் அதிக அளவில் பங்கேற்று முத்திரை பதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குமரவேல் மற்றும் ஹமினா இந்த கிளப்பை இப்போது வழிநடத்தும் வேலையில் ஆசிரியர் சுப்பிரமணியம் பயிற்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த கிளப்பில் இருந்து அறிமுகமான அப்பள நாயுடு பரதன் கிண்ண கால்பந்து போட்டி நெகிரி செம்பிலான் செம்பாக்கா கிளப்புக்கு விளையாடியவர் ஆவார்.
