
🔊To listen to this news in Tamil, Please select the text.
உலகிலேயே மைக்ரோபிளாஸ்டிக்கை (microplastics) அதிகமுண்பவர்களாக மலேசியர்கள் விளங்குவது அமெரிக்க ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு 15 கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை மலேசியர்கள் அவர்களுக்கே தெரியாமல் உட்கொள்கின்றனர்.
இது நீண்ட கால அடிப்படையில் அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மைக்ரோபிளாஸ்டிக் என்பது, ஓர் அரிசி பருக்கை விட சிறியதாக 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் பிளாஸ்டிக் துகளாகும்.
நச்சுத்தன்மையைக் கொண்டு வரும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் உணவுச் சங்கிலியில் சேரும் போது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
உணவு, சுவாசம், தோல் ஆகிய 3 வழிகளில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதர்களின் உடம்புக்குள் புகுந்து விடுகின்றன.



