
பினாங்கு நிபோங் திபால் ஆறுமுகம் பிள்ளை தொழில் பயிற்சிக் கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான புதிய மாணவர் பதிவு தொடங்கியுள்ளது.
இந்தப் பதிவில் மொத்தம் 109 மாணவர்கள் சேர்த்துக்
கொள்ளப்படுவர் என கல்லூரியின் இயக்குனர் அஸ்மான் பின் ஹாஜி
இப்ராஹிம் கூறினார்.
இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவிருக்கும்
எஸ்பிஎம் தேர்வின் முடிவுக்குப் பிறகு இந்திய மாணவர்கள் தங்களின் கல்வி
தகுதிக்கு ஏற்றவாறு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் சிறந்த
பயிற்சிகளை தேர்வு செய்து பயின்று தங்களின் எதிர்கால வாழ்க்கையை
சிறப்பாக அமைத்துக் கொள்ள இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ளலாம்.
