
மது மற்றும் சிகரெட் விற்பனைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் போது
பூ விற்பனைக்கு மட்டும் அனுமதி தர மறுப்பது ஏனென்று பினாங்கு
பயனீட்டாளர் சங்கத்தின்
கல்விப் பிரிவுத் தலைவர் என்.வி.சுப்பாராவ் கேள்வியெழுப்பினார்.தெய்வ
வழிபாடு முதல் வீட்டு விசேஷங்கள் வரையில் அனைவராலும் தினமும்
பயன்படுத்தப்பட்டு வரும் பூக்கள் வியாபாரத்திற்கு தடை
விதிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று
என்றார்.நோய் தொற்று பரவும் அளவிற்கு,பூக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்திருக்காது.அன்றாட பிழைப்புக்காக வருமானம் தேடும் தொழிலாக இருந்து வரும் இந்த பூ வியாபாரத்துக்கு அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென அவர்
வலியுறுத்தினார்.
