
தடுப்பூசியை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் உறுதியளித்திருப்பதால், பினாங்கு மாநில அரசாங்கம் சொந்தமாக கோவிட் -19 தடுப்பூசியை வாங்காது என மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
அண்மையில் பினாங்கு மாநிலத்திற்கு வருகைப் புரிந்த தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளரும்,அமைச்சருமான கைரி ஜமாலுடன் வழங்கியுள்ள ஆதரவை கொண்டு,பினாங்கு மாநில மக்களுக்கு
தேவையான தடுப்பூசியை சொந்தமாக வாங்க எண்ணத்தை கொண்டிருக்கவில்லை என்றார்.மத்திய அரசாங்கத்தின் இந்த உதவியை நம்பியிருப்பதால்,இனி பினாங்கு மாநிலத்திற்கு தடுப்பூசி கிடைப்பதில்
பிரச்சனை இருக்காது என்றார்.
