
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் பாசார் ராயா மற்றும் மளிகைக் கடைகளில் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் சில பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கடைக்காரர்கள் ஒரு பகுதியை மூடினர். இதுபற்றி கருத்துரைத்த தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குனர் ராபின் பாசிர் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்களையும் பாசார் ராயா மற்றும் மளிகை விற்கலாம் என்றார் அவர்.
