
தங்களிடம் பணிபுரியும் அந்நியத் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க தவறிய குற்றத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குடிநுழைவு துறையின் தலைமை இயக்குனர் டத்தோ கைருல் தெரிவித்தார். இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 3 கோடியே 30 லட்சம் வெள்ளி என்று அவர் தெரிவித்தார்.
2019 ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரை 1,691 முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்
