
🔊To listen to this news in Tamil, Please select the text.
அனைத்து உணவகங்களும் ஹலால் சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும் எனும் பரிந்துரையை ஜாக்கிம் ஆராய வேண்டும்.
நீலாய் தேசிய கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.
ஹலால் சான்றிதழை கட்டாயமாக்கப்படும் எனும் பரிந்துரை தற்போது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உணவங்கள் ஹலால் சான்றிதழை கொண்டிருக்க வேண்டும் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று தான்.
ஆனால் இதை கட்டாயமாக இருக்க வேண்டியதில்லை.
ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எளிதானது அல்ல. இது அதிக கட்டணம், கடுமையான நிபந்தனைகளை உள்ளடக்கியது.
இதனால் தான் மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானவை உட்பட பல உணவக நடத்துனர்கள், உணவு நிறுவனங்கள் ஹலால் சான்றிதழைப் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆகவே ஜாக்கிம் இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
