28.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடுவது கடினமான சூழல் – ஜாஹித் ஹமிடி!

🔥 Views : 2,764
👁 Reading Now : 66

ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக தேசிய முன்னணி போட்டியிட வேண்டியிருப்பது ஒரு தனித்துவமான மற்றும் சவாலான சூழல் என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மாட் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்தத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதில் கட்சியின் அனைத்து நிலை அமைப்புகளும் முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என்றார்.

“நாம் உண்மையான அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் போட்டியிட்டிருந்தால் அது எளிதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது புத்ராஜெயாவில் நண்பர்களாக இருக்கும் கட்சிகளுக்கு எதிராக ஜொகூரில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கடினமான சூழல்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், அம்னோவின் கொள்கைகள் மற்றும் தேசிய முன்னணி கூட்டணியின் நலன்களை முன்னிறுத்தி, அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் நிலவும் இந்த அரசியல் சூழல் வழக்கமான தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாலும், அதனை தொழில்முறை அணுகுமுறையுடன் எதிர்கொள்வது அவசியம் என்றும் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles