
🔊To listen to this news in Tamil, Please select the text.
செய்தி / படங்கள் : எம்.முருகன்
தமிழக தொலைக்காட்சி கலைஞர்களும் மலேசிய கலைஞர்களும் இணைந்து படைக்கும் இன்னிசை நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை இரவு கே எல் சி சி மண்டபத்தில் 7 மணிக்கு சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு பனானா லீப் ஓயோ மேல் மாடியில் நடைபெற்றது. இதில் தமிழக தொலைக்காட்சி கலைஞர்களும் மலேசிய புகழ்பெற்ற பாடகி காயத்ரி தண்டபாணி மற்றும் பல கலைஞர்களும் கலந்து கொண்டனர். அவர் கூறும் போது இந்த இசை நிகழ்ச்சி பழைய பாடல்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. அருமையான பாடல்களை தொகுத்து வழங்க உள்ளார்கள். காதலிக்க நேரமில்லை என்ற தலைப்பில் இந்த இசை நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. இதன் டிக்கெட் பரபரப்பான விற்பனையில் உள்ளது. அதிகமான ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதுபோல அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
