
கும்புலன் ஜூவாரா லீமா இந்திய டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தின் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வம் மறைவால் கோலாலம்பூர் வட்டத்தைச் சேர்ந்த இந்திய டாக்ஸி ஓட்டுனர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய டாக்ஸி ஓட்டுனர்கள் குடும்பங்களுக்கு பெரும் உதவி புரிந்தவர் தமிழ்ச்செல்வன் என்று சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் என்ற காந்தி தெரிவித்தார். நோய்தொற்று தாக்கத்தின் போது பாதிக்கப்பட்ட டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பலவிதமான உதவிகளை வழங்கினார்.
இவரின் மரணம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக அவர் சொன்னார்.
