
ஜோகூர் பார் பாசிர் கூடாங் தாமான் கோத்தா மாசாயில் வீடு ஒன்றில் கணவன் மனைவி இறந்து கிடக்க காணப்பட்டதாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுகாய்மி தெரிவித்தார்.
இறந்து போன 61 வயதான மதுவுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அவரின் கணவர் பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இவரின் வளர்ப்பு மகன் பலமுறை தொலைபேசியில் அழைத்தும் பதில் வரவில்லை.
பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது இருவரும் இறந்து கிடக்க காணப்பட்டதாக அவர் சொன்னார்.
