
🔊To listen to this news in Tamil, Please select the text.
இன்றைய காலகட்டத்தில் கல்வியின் அவசியம் மிக அதிகமாக உள்ளது. கல்வியே வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது. மலேசியாவைப் பொறுத்த மட்டில் இன்னமும் சில இந்திய மாணவர்கள் சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் குடும்ப வறுமை பொருளாதார நிலமை போன்றவை இதற்கு காரணமாகும். ஆகவே அரசியல் சமூக தலைவர்கள் அந்த தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பரிசாக அளிக்க வேண்டும் என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் தலைவர் டத்தோ கு செல்வராஜ் கருத்து தெரிவித்தார்.

மேலும் ஜெயபக்தி புத்தக நிலையத்தில் ஏராளமான கல்வி சார் அறிவியல் சார் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. பள்ளி மாணவிகளுக்கு வேண்டிய அனைத்துவித புத்தகங்களும் இங்கு சிறந்த விலை கழிவுடன் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே அரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்கள் தங்களால் என்ற புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று டத்தோகு செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.
