
இஸ்ரேல் – லெபனான் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது. ‘லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குவோம்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் வாக்கி டாக்கி, பேஜர் உள்ளிட்டவற்றை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டனர். போரில் இதுவரை பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இம்ரான் கட்சியினர் முற்றுகை பாகிஸ்தானில் பதற்றம் நீடிப்பு
தற்போது, இஸ்ரேல் – லெபனான் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது. இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி: இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி நாளை முதல் போர் முடிவுக்கு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும்.
