
🔊To listen to this news in Tamil, Please select the text.
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏனைய 3 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை முழுவதும் கடும் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
