
தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். அவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் மலேசியாவில் நடிகர் விஜய் அவர்களுக்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் தங்கள் மகத்தான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் மலேசியாவில் நடிகர் விஜய் அவர்களுக்காக புதிய ரசிகர் மன்றம் ஒன்று மனிதநேய மாமனி ரத்தினபள்ளி அம்மையார் தலைமையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த ரசிகர் மன்றத்தின் மூலம் சமூகத்திற்கு இயன்ற உதவிகள் செய்யப்படும் என்று ரத்தினவள்ளி அம்மையார் தெரிவித்தார்.
