
கல்வி வளர்ச்சியுடன், வர்த்தக முனைப்பு, திட்டமிட்ட சீரான வாழ்க்கை முறை, சேமிப்பு ஆகிய சிந்தனையுடன் நாட்டின் அரசியல் சுழலுக்கேற்ப வாழ்க்கையை கட்டமைத்து முன்னேற்றப் பாதையில் அனைவரும் பயணிப்போம்.என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிறக்கின்ற ஆங்கில வருடம் அனைவருக்கும் வளர்ச்சியைத் தந்து தளர்ச்சியை நீக்கும் வருடமாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த ஓராண்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை மனம் அசை போட்டுப் பார்க்கும். அடுத்த ஓராண்டுக்கான புதிய திட்டங்களை வகுப்போம். நடந்த விஷயங்களை ஆராய்ந்து, சிலவற்றைத் திருத்திக் கொள்வோம், சிலவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். இவை அனைத்தும் ஜனவரி 1 பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டை நோக்கியே நடைபெறும். அந்த அடிப்படையில் 2025ஆம் ஆண்டு அனைவருக்குமான ஆண்டாக மலர மனமார்ந்த வாழ்த்துக்கள். மலேசியாவில் அனைதது மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அனா அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
