
முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் மீதான விசாரணை ஆவணங்கள்
விரைவில் பூர்த்தியாகும்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் இதனை கூறினார்.
பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மானுக்கு எதிராக கூடுதல் உத்தரவு தொடர்பாக அவதூறான அறிக்கையை கைரி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான முன்னாள் சுகாதார அமைச்சர் கைரியின் விசாரணை அறிக்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது.
கைரி ஜமாலுடினின் வாக்குமூலத்தை நேற்று போலிசார் எடுத்து முடித்துவிட்டதாகவும்,
தற்போது விசாரணை ஆவணங்களை இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
