
2025 பொங்கல் பண்டிகை அனைவருக்கும் வளப்பத்தையும் நல்லாசியையும் வழங்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
சமயங்களுக்கிடையேயும் சமூகங்களுக்கு இடையிலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். குறிப்பாக இந்து மக்களுக்கு இந்தப் பண்டிகை நலத்தையும் வளத்தையும் கொண்டுவர செந்தோசா சட்டமன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக டாக்டர் குணராஜ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
