29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கலைஞர் பாரதி கண்ணா மறைவு; மலேசிய கலை உலகிற்கு பேரிழப்பு!

நாடாறிந்த கலைஞர் மற்றும் பாடகர் பாரதி கண்ணா மறைவு மலேசிய தமிழ் கலை உலகிற்கு பேரிழப்பாகும்.

மேடையில் பாடிக் கொண்டு இருந்த போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி சடங்கிற்கு பின்னர் அன்னாரது நல்லுடல் இன்று செராஸ் மின் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

மலேசிய தமிழ் கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் அவரது உடலுக்கு கண்ணுரோடு அஞ்சலி செலுத்தினர்.

அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பாரதி கண்ணா புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும். இரங்கல் செய்தியில் மனிதநேயமா மணி ரத்தினவள்ளி அம்மையார் கூறும்போது பாரதி கண்ணன் நல்ல கலைஞர் நல்ல பாடகர் அனைவரையும் மகிழ்வித்தான் இன்று நம்மோடு இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது எப்பொழுதும் என்னிடம் அம்மா அம்மா என்று அன்பாக பேசுவான் எனக்காக அம்மா பாடல்களை பாடுவான் அவனை என்னால் மறக்க முடியாது என்ற மேலும் இந்த பாரதி கண்ணனின் இறப்புக்கு வேண்டிய அனைத்து செலவுகளையும் அம்மா ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles