25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

இந்தியத் தலைநகரில் மோசமான வானிலை: 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம் 

புது டில்லியில் இன்று (ஜன.15) காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று (ஜன.15) காலை 5.30 மணியளவில் தில்லியின் சபார்டஞ் பகுதியின் குறைந்தபட்ச தெரிவுநிலை 200 மீட்டர்களாகவும், பாலம் பகுதியில் 150 மீட்டர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளது

புது தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான ஓடுபாதையின் தெரிவுநிலை 75 முதல் 300 மீட்டர்கள் அளவிலுள்ளதாகவும், இதனால் அங்கு இயக்கப்படும் விமானங்கள் சிஏடி 3 எனும் கட்டுபாடுகளின் கீழ் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles