
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மும்பை வீட்டிற்குள் வியாழக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் முதுகு தண்டுப் பகுதியில் ஆறு முறை கத்தி தாக்குதலுக்கு உள்ளான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்,
வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கொள்ளையடிக்கும் முயற்சியில் கள் சைஃப் அலிகானின் பாந்த்ரா வீட்டிற்குள் சந்தேக நபர் நுழைந்ததாகவும், அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது நடிகர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது சைஃப்பின் மனைவி கரீனா கபூர், இரு மகன்கள் வீட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
