
கோலாலம்பூர்:
கடந்த ஜனவரி 25 தேதி நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற 13 பல்கலைக்கழக மாணவர்களை வாக்குமூலம் அளிக்க போலிசார் அழைத்துள்ளனர்.
இதனை பேரணி ஏற்பாட்டாளரின் ஒருங்கிணைப்பாளர் டோபே கி சீன் கூறினார்.
இன்று மதியம் 12.30 மணியளவில் எனக்கு போலிசாரிடம் இருந்து ஒரு அழைப்பு, குறுஞ்செய்தி வந்தது.
மேலும் 13 மாணவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் நாங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.



