25.3 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

வீட்டுக் காவல் உத்தரவுக்கான வழக்கில் நஜீப்பிற்கு பின்னடைவு

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவாக மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்க தேசிய சட்டத் துறை தலைவர் செய்த மனுவை நிராகரிக்க, நஜீப் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

நஜீப்பின் தொடக்கக் கட்ட ஆட்சேபனையை, புத்ராஜெயா கூட்டரசு நீதிபதிகள் குழு (மூன்று நீதிபதிகள் கொண்ட குழு) நிராகரித்துள்ளது.

வழக்கின் மையப்புள்ளிகள்

🔹 SRC International ஊழல் வழக்கில் 42 மில்லியன் ரிங்கிட்டைச் சொத்துகாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நஜீப், 16-ஆவது மாமன்னரின் கூடுதல் உத்தரவின் அடிப்படையில் வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்கலாம் என்று வாதிட்டார்.

🔹 ஜனவரி 6, 2024, மேல் முறையீட்டு நீதிமன்றம், அரசாங்கம் உட்பட 6 தரப்புகள் வீட்டுக் காவல் உத்தரவை உறுதிசெய்யக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறி, நஜீப்பின் மனுவை ஏற்றுக்கொண்டது.

🔹 இதை எதிர்த்து தேசிய சட்டத் துறை தலைவர் மனு செய்தார்.

🔹 2023 ஜூலை 3, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், நஜீப்பின் வீட்டுக் காவல் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது.

🔹 UMNO தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி உட்பட நால்வர் ஆதரவாக அளித்த அஃபிடாவிட்கள் (Affidavits), வெறும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அவற்றை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

🔹 இதனால் நஜீப் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றார், ஆனால் தற்போது அவர் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles