
மத்திய அரசுக்கும் ஜொகூர் மாநில அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
கோலாலம்பூரில் இன்று துங்கு மகோட்டா இஸ்மாயிலை சந்தித்த அமர்வு நட்பான மற்றும் இணக்கமான சூழலில் நடைபெற்றதாக அன்வார் தெரிவித்தார்.
அந்த சந்திப்பின் போது பொருளாதார வளர்ச்சி, மாநில மேம்பாடு, மதானி அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“நட்பான மற்றும் இணக்கமான சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பு, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், குறிப்பாக ஜொகூர் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விஷயங்களை விவாதிக்கவும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது,” என்று அன்வார் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் மத்திய அரசும் மாநில அரசும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



