
கோலாலம்பூர் ஏப்ரல் 11-
நாட்டில் உள்ள கோவில்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தில் ஒரு விழுக்காட்டை இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் தமிழ் பேரவை மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் நிதியை திரட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் வகையில் மானியம் வழங்கப்பட வேண்டும்.
அதாவது கோவில்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் ஒரு விழுக்காட்டை இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
