
வருகின்ற இந்து சங்க தேர்தலுக்கு எங்கள் அணி பலமான அணியாக உள்ளது இதில் அதிகமான பேர் களமிறங்க உள்ளனர் எங்களுக்கு ஆதரவாக மோகன் சான் உள்ளார் என்று நடப்பு தலைவர் தங்க கணேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். தலைவராக இருந்து செயல்பட முடியாமல் இருக்கிறேன். இதற்கு துணைத் தலைவர்கள் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தடங்கலாக உள்ளனர் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். அதனால்தான் இப்பொழுது புதிய அணியுடன் இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம் நாங்கள் என்ன செய்தோம் இதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று அறிக்கையில் தெளிவாக சொல்லி விட்டோம். பொதுவாக கோவில் பிரச்சனை மற்ற பல பிரச்சனைகள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றியமைப்பேன் உடனுக்குடன் சேவைகளை தொடர்ந்து செய்வேன் என்றார்.
