
ஷா ஆலமில் செக்சன் 24 குடியிருப்பில் நடந்த சண்டை தொடர்பில் அனைத்து தரப்பினரும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில மாவட்ட போலீஸ் தலைவர் பகாரூடின் தெரிவித்தார்.
பூச்செடி மற்றும் கார் பார்க்கிங் சம்பவம் தொடர்பில் நடந்த சண்டையில் இந்திய மாது தாக்கப்படும் காட்சி காணோளியில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் 2 புகார்கள் பெற்றுள்ளனர். இருப்பினும் இரண்டு தரப்பும் தற்போது புகார்களை வாபஸ் பெற்றுக்கொண்டு சமாதானத்துக்கு முன்வந்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் அவர்கள் sop விதிமுறைகளை மீறி இருப்பதால் போலீசார் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று அவர் சொன்னார்.
நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
