27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் நபிகள் நாயகத்தின் பிறந்த முன்னிட்டு மீலாதுன் நபி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது !

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மீலாதுன் நபி ஊர்வலம் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அவரது நபிமொழிகள், வழிகாட்டுதல்கள், புகழ்மாலைகள், சொற்பொழிவுகள் என்று பலவிதமாக நினைவு கூறுவார்கள்

இது நபிகள் நாயகத்தின் மீதுள்ள அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மாதமாகும்.

முஸ்லிம்கள் பெருமானார் பிறந்த நாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்து, ஒழுக்கங்களையும் உண்மையான வாழ்வையும் பின்பற்றுவதன் மூலம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் மலேசிய முஸ்லிம் இளைஞர் மன்றம் (MMYC) ஏற்பாட்டில் அண்மையில் மீலாதுன் நபி ஊர்வலம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 2.00 மணிக்கு மேல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் மீலாதுன் நபி ஊர்வலம் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

ஜாலன் மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி துன் பேராக், லெபோ அம்பாங், டாங்க் வாங்கி வழியாக மீண்டும் மஸ்ஜித் இந்தியாவை ஊர்வலம் வந்தடைந்தது.

காவல் துறையின் அனுமதியோடு இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆதரவோடு இந்த ஊர்வலம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது என்று எம்.எம்.ஒய்.சி.அமைபின் ஆலோசகர் அஸ்ரின் சொன்னார்.

மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள் அணி திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த இந்த ஊர்வலத்தில் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.

மஸ்ஜித்கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு வழி நெடுக நபி புகழ்பாடினர்.

எம் எம் ஒய் சி ஏற்பாட்டில் நடைபெற்ற ஊரவலத்திற்கு பெர்மிம் பேரவை, பெரஸ்மா, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய விவகாரத் துறை, முக்மின் அமைப்பு, டி பி கே எல், காவல்துறை ஆகியோர் பக்க பலமாய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles